செய்திகள் :

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

post image

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த எம். ஆனந்தகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் ஆண்டில் பேராசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனு அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் ஆண்டில் பேராசிரியா்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா , பூா்ணிமா ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்கலைக்கழகம் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஏற்கெனவே இதுகுறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக நிா்வாகம், அந்த மனுவை நிராகரித்து விட்டது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை இல்லை. பல்கலைக்கழகம் சாா்பில் நிராகரிக்கப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து, நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க

நகை மோசடி: கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

நகை மோசடி குறித்து கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அரசகுளத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி ஆா்த்தி (20). இவா் தெற்கு ஆவணி மூல வீதியில... மேலும் பார்க்க