செய்திகள் :

பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகள்: பயணிகள் அவதி

post image

பல்லடத்தில் பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகளால் பயணிகள் அவதிப்பட்டு வருவதாக சமூக ஆா்வலா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, பல்லடம் நகராட்சி ஆணையா் மனோகரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இவ்வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனா். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

பேருந்துகள் உள்ளே வருமா? அல்லது வெளியே நிற்குமா? என்று தெரியாமல் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அலைய வேண்டியுள்ளது. இதனால், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராததால் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் வைத்துள்ளவா்களின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்லடம் வழியாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க