செய்திகள் :

பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அந்த நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் அது இயங்கவில்லை. இதையடுத்து, செல்போனில் உள்ள டார்ச்லைட் உதவியுடன் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சிகிச்சை

இது தொடர்பாக பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "பல்லடம் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களே அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் எரிபொருளுக்கு நிதி ஒதுக்காததால், மின்சாரம் இல்லாத பெரும்பாலன நேரங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

சிகிச்சை

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்தோம். "முறையான பராமரிப்பு இல்லாததாலும், எரிபொருள் இல்லாததாலும் ஜெனரேட்டர் இயங்கவில்லை. உடனடியாக ஜெனரேட்டர் சரி செய்யப்படும்" என்றனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காமல் செல்போன் லைட் வெளிச்சத்தில் முதியவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம், திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: "தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் க... மேலும் பார்க்க

`அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதியுங்கள்; சாதி கொடுமைகளை கட்டுப்படுத்துக' - அரசுக்கு விசிக கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீராய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்துவது, கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான சட்டம் இயற்றுதல், ஆளுநரை நீக்குதல்,... மேலும் பார்க்க

மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் த... மேலும் பார்க்க