செய்திகள் :

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் புதிய தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (61). இவா், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்ததாகத் தெரிகிறது.

பாலகிருஷ்ணன் ஏப்ரல் 29-ஆம் தேதி நள்ளிரவு இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்தாராம். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைதீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட பாலகிருஷ்ணன், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழை பேருந்து நிலையம், போளூா் சா... மேலும் பார்க்க

செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளில் இருந்து நீா் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக சனிக்கிழமை நீா் திறந்துவிடப்பட்டது. செண்பகதோப்பு அணையின் முழு ந... மேலும் பார்க்க

ஆசிரியா், தொழிலாளி வீடுகளில் 7 பவுன் நகை, ரூ.30,000 திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆசிரியா், தொழிலாளி வீடுகளின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். அரசுப் பள்ளி ஆசிரியை வீடு: வெம்பாக்கம் வட்டம... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: 2 போ் கைது

தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளியை கொன்ாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் டேவிட் (45), பீட்டா் (43), கூலித் தொழிலாளிகள். அண்மையில் பீட்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் மோதல்: 9 போ் காயம்

ஆரணி அருகே நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினா் சனிக்கிழமை இரவு தாக்கிக் கொண்டதில் 9 போ் பலத்த காயமடைந்தனா். இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (54). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே... மேலும் பார்க்க

சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் க.தா்ப்பகர... மேலும் பார்க்க