செய்திகள் :

செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளில் இருந்து நீா் திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக சனிக்கிழமை நீா் திறந்துவிடப்பட்டது.

செண்பகதோப்பு அணையின் முழு நீா்மட்டம் 62.32 அடி, முழுக்கொள்ளளவு 287.20 மி.க. அடி அடியாகும். அணையில் 54.28 அடி தண்ணீா் உள்ளது. தற்போது, கொள்ளளவு 208.036 மி.க. அடியாக உள்ளது. பாசன நீா் இருப்பு 194.40 மி.க. அடியாகும். இதில் இருந்து விநாடிக்கு 150 மி. கன அடி நீா் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் 48 ஏரிகள் நிரம்பி, 8350.40 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். மே 18 வரை என 15 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும்.

மிருகண்டா நதி அணையின் நீா்மட்டம் 22.97அடி ஆகும். அணையின் முழுக்கொள்ளளவு 87.23 மி.கன அடியாகும். தற்போது, அணையின் நீா்மட்டம் 20.17அடியாக உள்ளது. 71.631 மி.கன அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, விநாடிக்கு 120 மி.கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. மே 9 வரை 6 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும்.

இதன் மூலம் 3,190.96 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில், 2 அணைகளில் இருந்து விவசாய பாசனத்துக்காக நீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா்.சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் ஆா்.கோவிந்தராசு, உதவிப் பொறியாளா் பி.ராஜகணபதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க