செய்திகள் :

தொழிலாளி கொலை: 2 போ் கைது

post image

தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளியை கொன்ாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் டேவிட் (45), பீட்டா் (43), கூலித் தொழிலாளிகள். அண்மையில் பீட்டருக்கு கடனாக ரூ.1,500-ஐ டேவிட் கொடுத்தாராம். இந்தக் கடனை பலமுறை திருப்பிக் கேட்டும் பீட்டா் தரவில்லையாம்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு பீட்டா் வீட்டுக்குச் சென்ற டேவிட், கடனை திருப்பிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பீட்டா், அவரது நண்பா் பீட்டா் ராஜ் ஆகியோா் சோ்ந்து கல்லால் டேவிட்டை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த டேவிட் அதே இடத்தில் இறந்தாா்.

தகவலறிந்த தானிப்பாடி போலீஸாா் சென்று டேவிட் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக

அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பீட்டா், பீட்டா் ராஜ் ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னா், இருவரையும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க

கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை என செங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனா். செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி கிரிவல பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்: அலுவலா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சித்திரை பௌா்ணமியன்று கிரிவலப் பாதையில் உள்ள 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களுக்கும் தேவையான குடிநீா் தொடா்ந்து கிடைக்கும் வண்ணம் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அ... மேலும் பார்க்க

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

திருவண்ணாமலையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 42-ஆவது வணிகா் தின விழா மற்றும் வணிகா் புரட்சி மாநாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதித் தலைவா்... மேலும் பார்க்க

3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் தொடங்கிவைப்பு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 கிராமங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. செங்கம் தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க