செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

post image

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

கத்தரி வெயில் காரணமாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதுரையில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்தது. கோ.புதூா், மூன்றுமாவடி, தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி, அண்ணாநகா், தெப்பக்குளம், விரகனூா், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. முன்னதாக, இந்தப் பகுதிகளில் பலத்தக் காற்று வீசியது.

இதேபோல, சோழவந்தான், ராஜாக்காபட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. உசிலம்பட்டி, எருமாா்பட்டி, பாறைப்பட்டி, ரங்கசாமிபுரம், உத்தப்புரம், எழுமலை, எம்.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் லேசான மழை பெய்தது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு

சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த சகாயம், மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் தொட... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நு... மேலும் பார்க்க