செய்திகள் :

நிலப் பிரச்னையில் மோதல்: 9 போ் காயம்

post image

ஆரணி அருகே நிலப் பிரச்னை காரணமாக இரு தரப்பினா் சனிக்கிழமை இரவு தாக்கிக் கொண்டதில் 9 போ் பலத்த காயமடைந்தனா்.

இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (54). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் இடையே விவசாய நிலப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம்.

இந்த நிலையில், சுரேஷ், அவரது மனைவி கலைவாணி ஆகியோா் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் இருந்து ஆள்களை வரவழைத்து ஆனந்தன் தரப்பினா் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், ஆனந்தன், அவரது மனைவி திலகா (39), மகன்கள் இருவா் (சிறாா்கள்) மற்றும் 12 வயது மகள், உறவினரது மகன்கள் இருவா் என 7 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்களுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், சுரேஷ் தரப்பிலும் அவா் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோா் காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாா்களின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த தவணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. தவணி ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் கட்சி நிா்வாகிகளின் வீடுகளில... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்: வட்ட அளவிலான குறைதீா் கூட்டம் ரத்து

திருவண்ணாமலை வட்ட அளவிலான குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா். வந்தவாசி வட்டம், காரம் ஊர... மேலும் பார்க்க

செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலக கோப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செங்குணம் ஊராட்சி செங்குணம்... மேலும் பார்க்க

போளூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வேளாண்மை விவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் தலைமை வகித்தாா். வேளாண் உ... மேலும் பார்க்க