செய்திகள் :

பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜின்: கேரள அரசு திட்டம்

post image

கேரளத்தில் பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜினை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் முதல்முறையாக கேரள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு செய்தி மற்றும் தகவல் தொடா்புகள் தொழில்நுட்ப நூல்களில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படை மற்றும் முக்கியமான விஷயங்களை சோ்ப்பது, அவற்றின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி சனிக்கிழமை பேசியதாவது: கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப (கேஐடிஇ) நிறுவனம் தலைமையில், பள்ளிகள் பயன்பாட்டுக்கு நிகழாண்டு செயற்கை நுண்ணறிவு என்ஜின் உருவாக்கப்படும்.

கேஐடிஇயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ரோபோடிக் கருவிகள் அடங்கிய 29,000 தொகுப்புகளின் விநியோகம் நிறைவடைந்துள்ளது என்றாா்.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க