செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவா்கள் அங்கக வேளாண்மை கல்விச் சுற்றுலா

post image

திருவாரூரில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் அங்கக வேளாண்மை குறித்து அறிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு நாள் கல்விச் சுற்றுலா செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.

திருவாரூா் வட்டாரத்தில், வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஒருநாள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. இதில், திருநெய்ப்போ் மற்றும் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட கல்விச் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாணவ- மாணவிகள் குடவாசல் தயானந்தா அறக்கட்டளையில் உள்ள இயற்கைவழி வேளாண் பண்ணைக்குச் சென்று, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் இடுபொருள்கள் தயாரிப்பது குறித்து விளக்கம் பெற்றனா்.

தொடக்க நிகழ்வில், திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி, துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், வேளாண்மை துணை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான கோ. ஜெயசீலன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சு. பிரபாவதி, திட்ட ஒருங்கிணைப்பாளா் செ. ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இம்மருத்துவமனைய... மேலும் பார்க்க