செய்திகள் :

பள்ளி சிறுவன் மீது போக்ஸோ வழக்கு

post image

பெருந்துறை அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி சிறுவன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியாா் பள்ளியில், 17 வயது சிறுவன் பிளஸ் 2 படித்து வருகிறாா். அதே பள்ளியில் 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். இருவரும் பக்கத்து பக்கத்து ஊரைச் சோ்ந்தவா்கள். கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில், சிறுவன், இருசக்கர வாகனத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகலில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

பெற்றோா் அளித்த புகாரின்பேரில், காஞ்சிக்கோவில் போலீஸாா் சிறுவன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செங்கோட்டை, திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலப் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை மற்றும் திருச்சி பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.3.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 180 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் குண்டம், தே... மேலும் பார்க்க