செய்திகள் :

பழனி அருகே தனியார் செங்கல் சேம்பரில் ஊழியர் கொலை; சிறுமி உட்பட மூவர் கைது; பின்னணி என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் இயங்கி வருகிறது. இந்தச் சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23). நேற்று முன் தினம் இரவு சேம்பருக்குச் சென்ற சரவணன் உயிரிழந்தார்.

சரவணன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து போலீசார் வந்தனர். அதேநேரம், கிராம மக்கள் சேம்பரில் திரண்டனர். சரவணனைக் கொன்ற குற்றவாளியைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்த போலீசார் சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சரவணனின் குடும்பத்தினர்
சரவணனின் குடும்பத்தினர்

இந்த நிலையில் சேம்பரில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சம்பவம் நடந்த அன்று, சேம்பரில் வடமாநிலத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள்கள் தங்கி இருந்த அறைக்குச் சரவணன் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் சரவணன் 16 வயது சிறுமியைக் காதலித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த இரவு நேரத்தில் சிறுமியை சரவணன் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற போது சிறுமி சரவணனைத் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த சரவணனுக்குத் தலையில் அடிபட்டு உயிரிழந்ததுள்ளார்.

பின்னர் தனது தந்தை மற்றும் தங்கையிடம் நடந்ததை சிறுமி கூறிய போது கொலையை மறைப்பதற்கு இருவரும் உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. வடமாநிலத் தொழிலாளியான கோபால் மற்றும் இரண்டு மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க

`கணவனுக்கு கவுன்டிங் குறைவு' - வாரிசுக்காக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள்... மேலும் பார்க்க

பழனி: மகளுக்கு திருமணம் நடக்காததால் விரக்தி; மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை; என்ன நடந்தது?

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் - விஜயா தம்பதி. கட்டித் தொழிலாளர்களான இவர்களுக்கு கார்த்திகா, தனலட்சுமி என்ற 2 மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகா, நல்லசாமிக்... மேலும் பார்க்க

கோவை: கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனைத் தாக்கிய கரடி; சடலமாக மீட்ட வனத்துறை; வால்பாறையில் சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்கள் காடுகளை ஒட்டியே இருப்பதால் அங்குக் கடந்த சில ஆண்டுகளாக மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில... மேலும் பார்க்க

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்... மேலும் பார்க்க