செய்திகள் :

பவதாரிணியின் கடைசி ஆசை... இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு!

post image

பவதாரிணியின் நினைவாக சிறுமிகளுக்கான இசைக்குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25 அன்று காலமானார்.

அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்வு நேற்று (பிப். 12) அனுசரிக்கப்பட்டது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினரும் திரைத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும்: இளையராஜா

இதில், பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டு அவர் கடைசியாக இசையமைத்த ’புயலில் ஒரு தோணி’ பட இசை வெளியீடு நடைபெற்றது.

நிகழ்வில் பவதாரிணியின் கடைசி ஆசை குறித்து பகிர்ந்த இளையராஜா பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகளுக்கான இசைக்குழு தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

”பவதாரிணியின் கடைசி ஆசை சிறுமிகளுக்கான இசைக்குழுவை (ஆர்கெஸ்ட்ரா) உருவாக்குவது. நான் மலேசியாவில் இருந்தபோது மாணவிகள் குழுக்களாக வந்து என்னிடம் பாடிக் காட்டினார்கள். அதைப் பார்த்தவுடன் பவதாரிணி சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. பவதாரிணி பெயரால் பெண்கள் இசைக்குழு ஆரம்பிக்கவுள்ளேன். 15 வயதுக்கு மேற்படாத மாணவிகள் இந்த இசைக்குழுவில் இருப்பார்கள். அவர்களை மட்டும் தேர்வு செய்ய இருக்கிறேன்.

மலேசியாவிலேயே இரு இசைக்குழுக்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உலகின் எந்த மூலையிலிருந்து மாணவிகள் வந்தாலும் இந்த இசைக்குழுவில் சேரலாம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இந்த இசைக்குழு பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்” என்று இளையராஹாதெரிவித்தார்.

சப்தம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியு... மேலும் பார்க்க

இயக்குநரான தயாரிப்பாளர்... அதர்வா புதிய பட அறிவிப்பு!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தனது முதல் படமாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்பட... மேலும் பார்க்க

பிரபல கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்!

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார். கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி (57) கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தெனாவட்டு படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்... மேலும் பார்க்க

கண்ணாடி பூவே... வெளியானது ரெட்ரோ முதல் பாடல்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பூஜா ஹ... மேலும் பார்க்க

ஓடிடியில் மார்கோ!

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.அதிக வன்முறைக் ... மேலும் பார்க்க

பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு எதிரி: ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பழக்கப்பட்ட சூழல் நமக்கு எதிரியாக இருப்பதாகக் கூறியுள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்... மேலும் பார்க்க