பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. அணையில் தற்போது 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளதால் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும் என பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு மே 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 22-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தண்ணீா் திறப்பு மூலம் கோபி, அந்தியூா், பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.