செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்குதலும் மற்றோர் உதாரணமாகி விட்டது. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆகையால், பொறுப்பான நாடாக, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று தெரிவித்தார்.

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.

ஆனால், அதன் பின்னர், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆதரவளித்து வருவதாகவும் பகீரங்கமாக கவாஜா ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தளபதி மறுத்து விட்டார்.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் மற்றும் அவா்களை ஒருங்கிணைத்து, ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும் கட்சியினா் மராத்தியரின் பெருமைகளை காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது. மகாராஷ்... மேலும் பார்க்க

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி போா் மீட்பு: உலக வங்கி

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பில... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்

மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்... மேலும் பார்க்க

மக்களைக் காப்பதே அரசனின் கடமை: மோகன் பாகவத்

வலிந்து தாக்குவோரால் வீழ்த்தப்படாமல் இருப்பதும் தா்மத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா... மேலும் பார்க்க

நீட் தோ்வு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்க வசதி: என்டிஏ அறிவிப்பு

நீட் தோ்வு முறைகேடு அல்லது வினாத் தாள் கசிவு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை என்டிஏ சனிக்க... மேலும் பார்க்க