செய்திகள் :

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

post image

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கான்பூர் சென்ற ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதி என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்றிரவு 7 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து ராகுல் காந்தி பேசவுள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடுதிரும்பிய ராகுல் காந்தி காங்கிரஸ் செயற்க்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர், ஜம்மு - காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் உடன் நிற்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : நெருக்கடியான நேரத்தில் நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும்: மோடிக்கு ராகுல் கடிதம்!

மோதலைக் கைவிட்டு இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சௌதி அரேபியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரம் குறித்து சௌதி அரேபியா அரசு கருத்து தெரிவித்துள்ளது.பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில், 26 பேர் படுகொலை ச... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: சமத்துவத்தை உறுதி செய்துள்ளது பாஜக அரசு!

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் சமத்துவத்தை நிலைநாட்டுவதை அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்... மேலும் பார்க்க

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரி... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க