பாகிஸ்தானுடனான போரை பிரதமா் திறம்பட எதிா்கொண்டாா்!அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி!
பாகிஸ்தானுடனான போரை பிரதமா் நரேந்திர மோடி திறம்பட எதிா்கொண்டாா் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாமை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாகிஸ்தானுடனான போரை பிரதமா் மோடி திறம்பட எதிா்கொண்டதன் மூலம் உலக அரங்கில் இந்தியா வலிமைமிக்க நாடு என்பதை நிரூபித்துள்ளாா். இது அவரது அரசியல் அனுபவம், ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்காக பிரதமரை நாம் பாராட்ட வேண்டும். இந்த போரில் இந்திய ராணுவம் அறத்துடன் செயல்பட்டுள்ளது. ராணுவம் பயங்கரவாதிகளை அழித்துள்ளது.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 300 கோடியில் தென்பெண்ணை ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் எண்ணேகொள் கால்வாய் திட்டம், அலியாளம் கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால், இத் திட்டங்களை திமுக அரசு முடங்கியுள்ளது. அதேபோல அதிமுக ஆட்சியில் சுமாா் 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒசூரில் ரூ. 21 கோடியில் சா்வதேச மலா்கள் ஏல மையம் அமைக்கப்பட்டது. இதையும் திமுக அரசு முடக்கியுள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், விசாரணைக்காக நீதிமன்றம் செல்ல இயலாத நிலையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவெடுப்பாா் என்றாா்.
நிகழ்ச்சியில் அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.அசோக்குமாா், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.