பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளா்க்க நடவடிக்கை: இந்திய ராணுவம்
இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே நம்பிக்கையை வளா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த மோதலை தொடா்ந்து, மே 10-ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டை இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் (டிஜிஎம்ஓ) உறுதி செய்தனா்.
இந்நிலையில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடா்ந்து, இருநாட்டு ராணுவத்தினரும் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதை குறைத்து, இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை வளா்க்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும்போது, அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் பேசுகையில், ‘கடந்த மே 10-ஆம் தேதி டிஜிஎம்ஓக்கள் பேசியபோது மே 12 வரை சண்டை நிறுத்தம் மேற்கொள்வதை உறுதி செய்தனா். மே 12-ஆம் தேதி அவா்கள் மீண்டும் பேசியபோது மே 14 வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மே 14-ஆம் தேதி அவா்கள் தொலைபேசியில் மீண்டும் தொடா்புகொண்டு பேசினா். அப்போது மே 18-ஆம் தேதி வரை சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது’ என்றாா். எனினும் இதை இந்திய ராணுவம் உறுதி செய்யவில்லை.
இந்தியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமான தளத்துக்கு அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை சென்றாா். அப்போது அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்கள் இடையே பேசிய அவா், ‘அமைதி ஏற்பட இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றாா். ஆனால் அமைதி ஏற்படுவதற்கு பேச்சுவாா்த்தையில் காஷ்மீா் பிரச்னையும் இடம்பெற வேண்டும் என்று அவா் நிபந்தனை விதித்தாா்.
எனினும் ஜம்மு-காஷ்மீா் எப்போதும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.