செய்திகள் :

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?

post image

கதாநாயகன், கதாநாயகி இல்லாமல் எடுக்கப்பட்ட அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ள மகாவதாரம் நரசிம்மாவின் வசூல் நிலவரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2025 ஆம் ஆண்டில் இந்தியா சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் பல நல்ல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

அதில், பிளாக் பஸ்டர் படங்களாக விக்கி கௌசலின் சாவா, ஆமிர் கானின் சித்தாரே ஜமீன் பார் மற்றும் சமீபத்தில் வெளியான சையாரா ஆகிய படங்களும் நல்ல வசூலை ஈட்டி தயாரிப்பாளருக்கு நல்ல வருவாயை தந்துள்ளன.

இதற்கு மத்தியில்தான், 2 மணி நேரம் 10 நிமிடங்கள் கொண்ட கதாநாயகன், கதாநாயகி யாரும் இல்லாமல் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டுள்ள மகாவதாரம் நரசிம்மா என்ற திரைப்படம் வெறும் ரூ.4 கோடியில் உருவாக்கப்பட்டது. அனிமேஷன் படமான மகாவதாரம் நரசிம்மா சாதாரண படங்களுக்குப் போட்டியாக திரையரங்கில் சக்கைப் போடு போட்டுள்ளது.

கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது.

இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக மகாவதாரம் நரசிம்மா உருவாகியிருக்கிறது. ஜூலை 25 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த 5 நாள்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது.

முதல் நாளில் ரூ. 1.75 கோடியும், 2-வது நாளில் ரூ. 4.6 கோடியும், 3-வது நாளில் ரூ. 9.5 கோடியும், நான்காவது நாளில் ரூ. 6 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ. 7.7 கோடியும் வசூலித்துள்ளது. இந்தப் படம் இந்தியாவில் மொத்தமாக ரூ. 29.55 கோடி வசூலித்துள்ளது.

This 2 hour 10 minute film has no hero or heroine, still earned Rs 30 crore in 5 days, budget is only Rs 4 crore, film is...

இதையும் படிக்க :ரவுடிகளும், அடிமைகளும்! ரெட்ரோ அல்ல, கிங்டம்! -திரை விமர்சனம்!

பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!

பெங்களூரில் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்களால் நடிகையொருவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இப்போது தாய்லாந்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு திங்கள்கிழமை(ஜூலை 28) 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது. மும்பையிலுள்ள ஆமிர் கான் ... மேலும் பார்க்க

கூலி டிரைலர் - புது அப்டேட்!

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆக. 2-ஆம் தேதி ... மேலும் பார்க்க

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: என்ன காரணம்?

உதய்பூர் ஃபைல்ஸ் படத் தயாரிப்பாளருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2022-இல் நிகழ்ந்த கன்னையா கொலை வழக்கை மையப்படுத்தி படமாக்கப்பட்டுள்ள ‘உ... மேலும் பார்க்க