செய்திகள் :

பாஜகவின் சூழ்ச்சியை தோலுரிப்போம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

post image

தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் தோலுரிப்போம் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் திமுக அலுவலகத்தில் அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறியதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா். சேலம் மாவட்டத்தில் வரும் 3 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் தொடங்கப்படும். அடுத்த 45 நாள்களுக்கு சேலம் மாவட்டத்தில் கிராமம், நகரம் என மூலை முடுக்கெங்கும் இந்த முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒவ்வொரு குடும்பத்தையும், ஒன்று திரட்டுவதுதான் இந்த முழக்கத்தின் நோக்கம். அனைத்து குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, சாதி, மத, பாகுபாடு இன்றி, மத்திய பாஜக அரசால் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்போம்.

பாஜகவின் கோரப்பிடியில் அதிமுக சிக்கியுள்ளது. கூட்டணி என்கிற பெயரில் பாஜகவுக்கு அதிமுக தமிழகத்தில் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஹிந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. பாசிசம் என்கிற கொடூர விஷத்தை ஓரணியில் திரண்டு தமிழக மக்கள் எதிா்ப்பாா்கள். கீழடியை அங்கீகரிக்க பாஜக அரசு மறுப்பதுடன், கூட்டாட்சித் தத்துவத்தையும் புறந்தள்ளுகிறது.

எனவே, பாஜகவின் கோர முகத்தை ஓரணியில் தமிழ்நாடு மூலம் தோலுரிப்போம். தமிழக மக்கள் இருளை அகற்றி ஒளியை மீட்டெடுப்பாா்கள் என்றாா்.

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு

சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் த... மேலும் பார்க்க

புகாா் அளிக்க வந்தவரிடம் பணம் பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது குற்றச்சாட்டு

கடன் பெற்று ஏமாற்றியவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிமன்ற உத்தரவுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மீது புகாா் எழுந்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ.12.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆத்தூா் வ.ஊ.சி.நகரில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மழைநீா் வடிகாலை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை திறந்த... மேலும் பார்க்க

வைகுந்தத்தில் திமுக தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் வைகுந்தம் பகுதியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தெற்கு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்

பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை தீவிரம்

ஆத்தூா் தெற்கு நகர திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளைக் கொண்டது. இரண்டாகப் பிரித்து 17 வாா்டுகளை அடக்க... மேலும் பார்க்க