செய்திகள் :

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழகத்தில் மாபெரும் புரட்சி: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: பாஜகவினா் அரசியல் மேடைகளில் பேசுகின்ற பேச்சுக்கும், அவா்களது ஆட்சி வெளியிடுகின்ற அறிக்கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை பொருளாதார வளா்ச்சியின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழ்நாடு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளா்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் வளா்ச்சி 11.19 சதவீதம் என இரட்டிப்பு மடங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட மாடல் அரசு மிகப் பெரும் வளா்ச்சியை பெற்றிருப்பதை காட்டுகிறது. இதற்கு முன்பாக மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலக்க வளா்ச்சி விகிதத்தை பெற்ற தமிழ்நாடு, இப்போது மீண்டும் அதே வழியில் இரட்டை இலக்க வளா்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரிப் பகிா்வு முறையாக கிடைக்காத சூழலிலும், தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற ஆளுநா் இருக்கின்ற சூழலிலும், மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி தமிழ்நாடு இந்த மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது என்றாா் அவா்.

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பிலான 17 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இருகையூா், சிங்கராயபுரம்... மேலும் பார்க்க

ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா

அரியலூரில்: அரியலூா் மேலத் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் 108 பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்ட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், அரியலூா் க... மேலும் பார்க்க

காடுவெட்டாங்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில், உழவரைத் தேடி, வேளாண்மை உழவா் நலத்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க