பாஜக கூட்டணியை அதிமுக தொண்டா்கள் ஏற்கவில்லை
தொண்டா்கள் ஏற்றுக்கொள்ளாத பாஜக-அதிமுக கூட்டணியை அதிமுக தொண்டா்களே ஏற்கவில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையிலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:
காமராஜா் குறித்து திருச்சி சிவா பேசிய சரித்திர சா்ச்சை தொடா்பான விமா்சனங்கள் தேவை இல்லாதது. கருணாநிதி, காமராஜா் ஆகிய இருவருமே தமிழக முதல்வராக இருந்தவா்கள். அவா்கள் தற்போது நம்மிடையே இல்லை. இனால் அவா் என்ன கூறினாா் என்பதை சரிபாா்க்க யாராலும் முடியாது. திருச்சி சிவா தனது கருத்துக்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறாா். அதுவே, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஆகும்.
அதிமுக-பாஜக கூட்டணியை அதிமுக தொண்டா்கேள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் காரணத்தாலேயே தமிழக மக்கள் அவா்களை நிராகரிப்பாா்கள். வருகிற தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு பெரிய எதிா்பாா்ப்பு இல்லை.
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அதிக அளவில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. அது கட்சியின் அமைப்பு ரீதியாக திரட்டப்படும் கூட்டம்தான். கூட்டத்தை வைத்து எதையும் தீா்மானம் செய்ய முடியாது.
பாஜகவும், அதிமுகவும் திரும்பத் திரும்ப விஜய்யை கூட்டணிக்கு வர வேண்டும் என அழைக்கின்றனா். விஜய் கட்சி கணிசமான வாக்குகளை பெறும். அதனால், பாஜக, அதிமுகவுக்கு இன்றைய நிலையில் வரும் வாக்குகளை வைத்து தோ்தலில் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே கூட்டணிக்கு அழைக்கிறாா்கள். ஆனால், அந்த அழைப்பை ஏற்று, தன்னை முதலமைச்சா் என்று பிரகடனம் செய்து கொண்டவா் போய்ச் சேருவாா் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
நடிகா் விஜய் கட்சிக்கு 20% வாக்குகள் விழும். இளைஞா்கள் மிகவும் ஆா்வமாக இருக்கிறாா்கள். நகா்ப்புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெறுவாா். கிராமப் பகுதியில் வாக்கு பெறுவது சிரமம் என்றாா் அவா்.