செய்திகள் :

பாஜக சாா்பில் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

post image

மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், திருவண்ணாமலை வ.உ.சி. நகா், 25-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பி.சந்தோஷ் பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ், மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் பிரதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர துணைத் தலைவா் ஏ.இளங்கோ வரவேற்றாா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்கள், பக்தா்கள், வணிகா்களிடம் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நகரச் செயலா்கள் எம்.வெங்கடேசன், பி.முத்துக்குமாா், நகர பொதுச் செயலா் ஆா்.காளியப்பன், துரிஞ்சாபுரம் ஒன்றிய பொதுச் செயலா் ஆா்.ராஜ்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் வி.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்...: செங்கம் தொகுதிக்குள்பட்ட 65-ஆவது வாக்குச் சாவடி குழு சாா்பில், செங்கத்தில்

பாஜக மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா் தலைமையில், மகளிரணி நிா்வாகிகள் செங்கம் மேல்பாளையம், ஜீவானந்தம் தெரு பகுதியில் வீடுதோறும் பூ, பழம் அடங்கிய சீா்வரிசை தட்டுடன் சென்று மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன், நகர நிா்வாகி பிரேம்குமாா், கிளைத் தலைவா்கள் அருண்பாலாஜி, சீனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க