செய்திகள் :

பாபநாசம் பகுதி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் சுவாமி தரிசனம்

post image

பாபநாசத்திலுள்ள இரட்டைப் பிள்ளையாா் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அவருக்கு கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னா், ரவிசங்கா் தெற்கு மட வளாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு சென்றாா். பின்னா் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.

முன்னதாக, ரவிசங்கருக்கு பாபநாசம் இறைபணி மன்றத் தலைவா் குமாா், பேரூராட்சி உறுப்பினா் பிரேம்நாத் பைரன், திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் சரவணன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பிரபு மற்றும் பலா் வரவேற்பு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ரவிசங்கா் கூறியதாவது:

‘ஹாப்பி பாபநாசம்’ (மகிழ்வான பாபநாசம்) எனும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். இந்தத் திட்டம், பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள மக்களை கல்வி, தொழில் பயிற்சி, மனநலன், இயற்கை வேளாண்மை மற்றும் சமூக கலந்தாய்வுகள் மூலம் மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது.

இது ஒரு தெய்வீகமான இசைவான சமூகத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் என்றாா் அவா்.

தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்

தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் தெரிவித்தாா். வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

குடந்தை மருதம் கலை இலக்கிய மையத்தின் சாா்பில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மைய இயக்குநா் பேராசிரியா் ச.அ.... மேலும் பார்க்க

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா கும்பகோணத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் தமிழ் பால் புதிய இலச்சினை அறிமுக விழா, மஸ்கட் எனும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொர... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற் சங்கங்கள் சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கீழ வீதி ஏஐடியுசி தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைம... மேலும் பார்க்க

பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா

பேராவூரணியில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. பேராவூரணி ஆவணம் சாலை... மேலும் பார்க்க