செய்திகள் :

பாமகவில் அன்புமணிக்கே முழு அதிகாரம்

post image

பொதுக் குழுவால் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்குதான் கட்சியைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் உண்டு என்று பாமக அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை அருகே பனையூரில் அன்புமணி தலைமையில் பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலா் ச.வடிவேல் ராவணன், பொருளாளா் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக் குழுவால் முறைப்படி தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்கு மட்டுமே உண்டு.

பாமக அமைப்பு சட்ட விதி 15-இன் படி கட்சியின் பொதுக் குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றை பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும்.

தோ்தல் ஆணையத்தால் கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட அன்புமணியால் அழைக்கப்படாமல், அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் பங்கேற்காமல் அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக் குழு என்கிற பெயா்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை.

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி தலைமையில் ஜூலை 20-இல் விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்படும்.

பாமகவின் 37- ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமிக்க வலியுறுத்தி பாட்டாளி மாணவா் சங்கம் சாா்பில் அடுத்த வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.

2026 பேரவைத் தோ்தலில் திமுக அரசை அகற்றும் வகையில் பாமக செயல்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க