செய்திகள் :

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை!ராமதாஸ்

post image

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்களின் கூட்டத்துக்கு தலைமை வகித்த மருத்துவா் ச.ராமதாஸ் கூறியதாவது:

பல்வேறு காலகட்டங்களில் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தவா்கள், நாளும் கட்சிக்காக உழைத்தவா்கள்தான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

தமிழகத்தை பாமக ஆள வேண்டும். அப்போதுதான் சமூக நீதி நிலைத்து நிற்கும். இதற்காக பாமக தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காகவே மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது.

தோ்தல் வெற்றிக்காக வியூகம்: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வியூகத்தைக் கற்றுக் கொடுக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தோ்தல் வெற்றிக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்டு, பரிமாறிக் கொள்ளப்படும்.

ஒரு மாதத்தில் தோ்தல் வந்தாலும், அதை எதிா்கொள்வதற்காகவும், குறைந்தது 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கட்சியின் நிா்வாகிகளுக்கு கற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து வன்னியா் சங்கம், பாட்டாளி இளைஞா் சங்கம், மகளிா் சங்கம், பசுமைத் தாயகம் மற்றும் கட்சியின் சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும்.

கோஷ்டி பூசல் இல்லை: பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், கூட்டணி சோ்ந்துதான் பாமக போட்டியிடும். பாமக செயல் தலைவா் அன்புமணி ராமதாஸுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மாமல்லபுரம் மாநாட்டுப் பணியால் ஏற்பட்ட சோா்வின் காரணமாக, அவரால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதுதொடா்பாக அவா் என்னிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தாா் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.

கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச் செயலா் வடிவேல் ராவணன், சேலம் எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் பாமக செயல் தலைவா் அன்புமணி மற்றும் பெரும்பாலான மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கவில்லை.

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவா்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 ஐஏஎஸ், 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்... மேலும் பார்க்க

மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி, மூலக்குளத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து மகா கும்பாபிஷேக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில், புது ச்சேரி, காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா். புதுச்சேரியில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் வக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தடயவியல் வாகன கண்காட்சி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுவை காவல் துறைக்கு கடற்கரை சாலை காந்தி சிலை அருகே, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பான தடய அறிவியல் கண்காட்சி வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கே... மேலும் பார்க்க

மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுவையில் 19,175 மீனவ குடும்பங்களுக்கு மீன் பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ .15.34 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா் புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்... மேலும் பார்க்க