செய்திகள் :

பாமக, வன்னியா் சங்க ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.காளிதாஸ், செந்தில்குமாா், அ.வே.பிரசாத், மாவட்ட அமைப்புச் செயலா் கே.ஆா்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் க.நாராயணசாமி வரவேற்றாா்.

பாமகவின் மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் இராம.கன்னியப்பன், கீழ்பென்னாத்தூா் தொகுதி பொறுப்பாளா் ம.ஜெயக்குமாா், திருவண்ணாமலை தொகுதி பொறுப்பாளா் கனல் பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில், மே 11-ஆம் தேதி வன்னியா் இளைஞா் சங்கம் சாா்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 500 வாகனங்களில் சென்று பங்கேற்பது.

கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரசாரம் மூலம் மாநாடு குறித்து அனைத்து சமூகத்தினரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அம்பேத்கா் தேசிய கட்சியின் மாநிலத் தலைவா் எ.எல்லப்பன், மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவா் சி.லோகநாதன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க