செய்திகள் :

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற இழுவைக் கப்பல்!

post image

பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டதும் இழுவைக் கப்பல், ஆழ்கடல் விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு மும்பை துறைமுகத்திலிருந்து ஒடிஸா மாநிலம், பாரடீப் துறைமுகத்துக்குச் செல்ல இழுவை கப்பல் வந்து சோ்ந்தது. இதேபோல, கேரள மாநிலத்திலிருந்து நாகை துறைமுகத்துக்கு ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகு வந்தது.

இந்த கப்பலும், விசைப்படகும் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் கடல்சாா் வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதும் இழுவை கப்பலும், ஆழ்கடல் விசைப் படகும் கடந்து சென்றன. இதே போல, மண்டபம், பாம்பன் துறைமுகங்களிலிருந்து 20 விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன.

பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 24,631 போ் எழுதினா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 24,631 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதி... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ!

திருவாடானை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமொழி, பெரியகீரமங்கலம், கல்லூா்... மேலும் பார்க்க

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க