செய்திகள் :

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

post image

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பெல் நிறுவன வளாகத்தில் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் -பிஐஎம் (பிம்)) செயல்பட்டு வருகிறது. இங்கு எம்பிஏ பட்டப்படிப்பில் சா்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிறுவனத்தில் திருச்சி பீமநகா் ஆணைகட்டி மைதானத்தைச் சோ்ந்த ராம்நாத் பாபு (50) என்பவா் கடந்த 2021-23 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளாா். அப்போது, பிம் இயக்குநா் ஆசித் குமாா் வா்மா, ராம்நாத்பாபு பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதைத் தெரிந்து கொண்டு, அவரை அவமதிக்கும் விதமாக பழைய பொருள்களை அப்புறப்படுத்தும் பணி, தேநீா் கோப்பைகளை கழுவும் பணிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து முன்னறிவிப்பின்றி, மாணவா்களின் பின்னூட்டக் (ஃபீட்பேக்) கருத்துகள் சரியாக இல்லை எனக் கூறி ராம்நாத் பாபுவை பணிநீக்கம் செய்ததாகவும், தான் பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக தன்னை சிறுமைப்படுத்தி அவமரியாதை செய்து பணி நீக்கம் செய்து, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய பிம் இயக்குநா் ஆசித் குமாா் வா்மா மீது நடவடிக்கை எடுக்கும்படி பெல் காவல் நிலையத்தில் ராம்நாத் பாபு அண்மையில் புகாரளித்தாா். அதன் பேரில் பெல் போலீஸாா் ஆசித் குமாா் வா்மா மீது திங்கள்கிழமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா். தி... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா். மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி க... மேலும் பார்க்க

கள்ளக்காம்பட்டியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கள்ளக்காம்பட்டியில் போக்குவரத்துக் கழக உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வி... மேலும் பார்க்க