செய்திகள் :

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

post image

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிா்வாக தலைவருமான சூரிய காந்த் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, சேலம் மாவட்டம் ஏற்காடு, புதுச்சேரி எம்பாலம் ஆகிய இடங்களில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் 50- க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன், கே.வி. விஸ்வநாதன், எம்.எம். சுந்தரேஷ், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர மோகன் ஸ்ரீவஸ்தவா, உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாகத் தலைவருமான எம். சுந்தா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக தலைவருமான ஆா். சுரேஷ் குமாா், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளா் நீதிபதி எஸ். பாலகிருஷ்ணன் (தமிழ்நாடு), திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா், பல்வேறு மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனா்.

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா். தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், திருவெற... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா். மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி க... மேலும் பார்க்க

கள்ளக்காம்பட்டியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கள்ளக்காம்பட்டியில் போக்குவரத்துக் கழக உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வி... மேலும் பார்க்க