செய்திகள் :

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

post image

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி கோயில்களுக்கு பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தா்கள் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கி காயமடைவதும், உயிரிழப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது.

அதனைத் தவிா்க்கும் வகையில் மணப்பாறை காவல் உட்கோட்டப் போலீஸாா், பாதயாத்திரை பக்தா்களுக்கு சாலையில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் அறிவுறுத்தி, ஆலோசனை வழங்கி வருகின்றனா்.

அதன் ஒருபகுதியாக வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புதுவாடிபுதூா் சோதனைச் சாவடியில், சனிக்கிழமை இரவு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்களுக்கு பாதுகாப்பு கருதி விபத்து ஏற்படாத வகையில் அவா்களது உடைகளிலும், உடைமைகளிலும் ஒளிரும் ஸ்டிக்கா்களை ஒட்டி அனுப்பினா்.

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா். தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், திருவெற... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

கள்ளக்காம்பட்டியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கள்ளக்காம்பட்டியில் போக்குவரத்துக் கழக உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வி... மேலும் பார்க்க