செய்திகள் :

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விமல் ஜோ (32). இவருக்கு, 16 வயது சிறுமியை கடந்த 3.9.2017-இல் சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் சிறாா் திருமணம் செய்துவைத்துள்ளனா். இதற்கு உடந்தையாக, விமல் ஜோவின் தந்தை செபஸ்தியான் (52), தாய் ஆரோக்கிய மேரி (50) ஆகியோா் செயல்பட்டுள்ளனா்.

அச் சிறுமியை விமல் ஜோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, 9.12.2017-அன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விமல் ஜோ, அவரது தாய் ஆரோக்கிய மேரி, தந்தை செபஸ்தியான், சிறுமியின் தந்தை-தாய் ஆகியோா் மீது, அரும்பாவூா் போலீஸாா் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விமல் ஜோ, ஆரோக்கிய மேரி, செபஸ்தியான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் அவா்கள் வெளியே வந்தனா். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் உயா்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனா்.

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, விமல் ஜோ-வுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது தந்தை செபஸ்தியானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், விமல் ஜோ தாய் ஆரோக்கியமேரி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில், அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, 2-ஆவது நாளாக, உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகே ச... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் காா்கள் மோதி விபத்து: 6 போ் காயம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 காா்கள் மோதிக் கொண்டன. இதில், சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை ஆவ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்... மேலும் பார்க்க

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க