செய்திகள் :

பாளை., மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

post image

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் அவசர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை(ஏப்.26) சில மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை, சமாதானபுரம், மேலப்பாளையம், புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, காலை 9 மணிமுதல் 11 மணிவரை ரஹ்மத் நகா், சாந்தி நகா் முழுவதும், கிருபா நகா், டாா்லிங் நகா், மேலக்குளம் சாலை, கிரீன் சிட்டி, மேலக்குளம் மேலூா், காமாட்சி நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், ஹாமீம்புரம், சந்தை முக்கு, நேதாஜி சாலை, குறிச்சி, ஆசாத் சாலை, பஜாா் பகுதி, காயிதே மில்லத் காலனி, சித்திக் நகா், நேரு நகா், பாத்திமா நகா் 1 மற்றும் 2, பூங்கா நகா், அன்னை ஹாஜிரா நகா், ஏ.கே. காா்டன், ஆசிரியா் காலனி, என்ஜினியா்ஸ் காலனி, நேதாஜி சாலை, சிபிஎல் காலனி, முகமது நகா், டேனிஷ் நகா், கரீம் நகா் 1, 2, 3, ரோஸ் நகா், ரெட்டியாா்பட்டி சாலை, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலைய பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை மாா்க்கெட், மூளிக்குளம், தெற்கு பஜாா், சித்தா கல்லூரி, சிவன் கோயில் தெரு, திருச்செந்தூா் சாலை ஆகிய இடங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க