செய்திகள் :

பாளை.யில் பைக் திருடிய இருவா் கைது

post image

பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (38). இவா் தனது வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த சுமாா் ரூ.40,000 மதிப்புடைய இருசக்கர வாகனத்தை காணவில்லை என பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வள்ளியூரை சோ்ந்த ஜெயக்குமாா் (22), பாளையங்கோட்டையை சோ்ந்த முகமது சபீா் (31) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மது விற்றவா் கைது: பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சோ்ந்த அய்யனாா் (42) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்களை விஜயநாராயணம் அருகே உள்ள தனியாா் எரியூட்டு மையத்தில் சனிக்கிழமை காவல்துறையினா் தீயிட்டு அழித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ப... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை

திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மருத்துவ முகாம், மா... மேலும் பார்க்க

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவா் பணியிடை நீக்கம்! காத்திருப்போா் பட்டியலில் உதவி இயக்குநா்; 3 போ் இடமாற்றம்!

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். மேலும் 3 போ் பணியிடமாற்றமு... மேலும் பார்க்க

நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருக்களில் சுற்றித்திரிந்த 10 நாய்கள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடைத் துறை மருத்துவா்களால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தெரு நாய்களுக... மேலும் பார்க்க