செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் பரமசிவன். இவருடைய மனைவி உமா (37). தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். பாவூா்சத்திரத்திலிருந்து கடையம் செல்லும் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறாா் பரமசிவன்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் தூங்கி எழுந்ததும் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க பரமசிவன் சென்றதாக கூறப்படுகிறது. அவரது இரு மகன்களும் வீட்டின் மாடியிலும், உமா கீழே உள்ள அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், உமாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டாா்.

கடையிலிருந்து பரமசிவன் வீடு திரும்பியபோது மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க