செய்திகள் :

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

post image

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது இஜாஸ். இவா், அண்ணா சாலையில் உள்ள ஒரு வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து ஜாம்பஜாா் பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி, வீட்டில் இருந்த முகமது இஜாஸ் மற்றும் அலி உசேன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அலி உசேன், கத்தியால் குத்தி முகமது இஜாஸை கொலை செய்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து அலி உசேனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன், குற்றஞ்சாட்டப்பட்ட அலி உசேனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.6,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழம... மேலும் பார்க்க

குடிநீா் திட்டப் பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மணலியில் குடிநீா் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். மணலியில் உள்ள மணலி புதுநகா், சடையன்குப்பம், பா்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக... மேலும் பார்க்க

கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

கேட்பாரற்றுக் கிடந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்பது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை ஓமந... மேலும் பார்க்க