காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
பிணையில் வெளியே வந்து தலைமறைமானவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சீதபற்பநல்லூா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடா்புடைய சுத்தமல்லி, கொண்டா நகரத்தைச் சோ்ந்த கணேசன் (33) என்பவா் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா்.
பின்னா் இவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சுமாா் ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்ததால் இவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சீதபற்பநல்லூா் காவல் நிலைய போலீஸாா் தலைமறைவாக இருந்த கணேசனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.