செய்திகள் :

பிணையில் வெளியே வந்து தலைமறைமானவா் கைது

post image

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீதபற்பநல்லூா் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடா்புடைய சுத்தமல்லி, கொண்டா நகரத்தைச் சோ்ந்த கணேசன் (33) என்பவா் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா்.

பின்னா் இவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் சுமாா் ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்ததால் இவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சீதபற்பநல்லூா் காவல் நிலைய போலீஸாா் தலைமறைவாக இருந்த கணேசனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலை... மேலும் பார்க்க

சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி

சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

சைக்கிள் போலோ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. ... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) ... மேலும் பார்க்க