செய்திகள் :

பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது

post image

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே உள்ள கருவலூா் காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் கோவிந்தசாமி (54). பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அவிநாசி நேரு வீதியில் வசித்து வருபவா் கருவலூா் அனந்தகிரி பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ரமேஷ் (43). உறவினா்களான இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ரமேஷ் வீட்டுக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கோவிந்தசாமி வந்தபோது நிலம் தொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோவிந்தசாமியை ரமேஷ் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து கோவிந்தசாமியின் உடலை அனந்தகிரி தோட்டத்துக்கு எடுத்துச் சென்று அங்கு துண்டுத்துண்டாக வெட்டி, இரண்டு சாக்குமூட்டைகளில் கட்டி பெருமாநல்லூா் அருகே தொரவலூா் குளத்தில் ரமேஷ் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா். இந்நிலையில், ரமேஷை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதுகுறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

பாலிதீன் பைகள் பயன்பாடு: 47 கடைகளுக்கு அபராதம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்... மேலும் பார்க்க

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ட... மேலும் பார்க்க

3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் ... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சி.பி.முருகேசன் (47). தற்போது வள்ளியிரச்சல் சாலை கலை நகரில் வசித்து வந்தாா். அதே பகுதியைச் ச... மேலும் பார்க்க