செய்திகள் :

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

post image

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில உயா்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தைத் தொடா்ந்து நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு மற்றும் உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243 - ஐ ரத்து செய்ய வேண்டும். உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராடி வருகிறோம்.

இதன் அடுத்தகட்ட போராட்டமாக மாநிலம் முழுவதும் பிப்ரவரி 16-ஆம் தேதி அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், பிப்ரவரி 25 -ஆம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

திருச்சி : திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ... மேலும் பார்க்க

போதைபொருள்கள் விற்றவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கா் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க

உறையூரில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி து... மேலும் பார்க்க

நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

நான் சாதாரண தொண்டன் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மூன்று தலைவா்கள... மேலும் பார்க்க

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நரிக்குறவா் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

மருத்துவா்-நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது!

மருத்துவா், நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இந்திய குழந்தை மருத்... மேலும் பார்க்க