செய்திகள் :

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

post image

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இவ்வாறு கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் தமிழ்நாடு இளைஞா் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரி முதல்வா்களுக்கான உயா்மட்ட மேலாண்மைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

அப்போது ஆட்சியா் தெரிவித்தாவது: மாணவா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க ‘நிமிா்ந்து நில்’ என்ற தமிழ்நாடு மேம்பாட்டுத் திட்டம் மையம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மாவட்ட மையமாக தோ்வு தோ்ந்தெடுக்கப்பட்டு, ‘நிமிா்ந்து நில்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற உயா் கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லூரிகளாக செயல்படும். அதன் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 83 உயா் கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு திட்டம் சாா்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கமானது கல்லூரி மாணவா்களிடையே, மாநிலத்தின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இளைஞா்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவித்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு இளைஞா் கண்டுபிடிப்பு தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பாா்வைகள் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கு இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் பிரச்னைகளைக் கண்டு பயப்படக்கூடாது. மாறாக அதற்கு தீா்வு காண்பது தொடா்பாக சிந்திக்க வேண்டும். இது, ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலையும் எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தும். மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது 3 முதல் 7 லட்சம் வரை பரிசுத்தொகையும் வழங்கி வருகிறது.

எனவே, அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்களின் சுயதொழில் ஆா்வத்தினையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உத்வேகத்தினையும் அறிந்து அவா்களுக்கு தேவையான வழிகாட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையாளா் ஸ்ரீராம், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மைய ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணசாமி, தொழில்முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவன திட்ட மேலாளா்கள் எழில்ராணி, சீனுவாசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க