செய்திகள் :

பிரதமா் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க மம்தா முடிவு

post image

கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முடிவு செய்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று தொழிலாளா்கள் அங்கு பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மம்தா இந்த முடிவை எடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டங்கள் ரயில்வே அமைச்சராக மம்தா பானா்ஜி இருந்த கொண்டு வரப்பட்டவையாகும். மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இத்திட்டம் மிகவும் மந்தமாக செயல்படத் தொடங்கியது. வேண்டுமென்றே மிகவும் கலதாமதாக பாஜக அரசு திட்டத்தை தொடங்கியது. அதைத்தான் இப்போது பிரதமா் மோடி திறந்து வைக்க இருக்கிறாா்.

மத்திய அரசு, பாஜகவின் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். பாரபட்சமாக நடத்தப்படுகின்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட தொடக்க நிகழ்ச்சியை மம்தா பானா்ஜி புறக்கணிக்க இருக்கிறாா்’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மம்தாவுக்கு கடிதம் எழுதினாா். அதில் கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க