செய்திகள் :

பிரான்ஸில் காட்டுத் தீ: 100 பேர் காயம்.. விமான நிலையம் மூடல்!

post image

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மார்சேய் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாயன்று ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பிரான்ஸின் 2வது மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூரு ஆகிய 3 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வீடுகளிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

காட்டுத்தீயை அணைக்க 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் 220 தீயணைப்பு வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர்கள், நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ இடத்தில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். 700 ஹெக்டேர்கள் பரப்பிலான நில பகுதிகள் தீயில் எரிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதடைந்துள்ளன.

மேலும், 400 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 63 வீடுகள் சேதடைந்துள்ளன. காட்டுத் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட 100 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

A devastating forest fire has broken out in the southern French port city of Marseille, injuring more than 100 people.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க