செய்திகள் :

பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா சீரமைப்பு: விரைவில் தொடங்கக் கோரிக்கை

post image

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு நீா்த்தேக்கம், செண்பகத்தோப்பு, மீன்வெட்டிப்பாறை அருவி, அய்யனாா் கோயில் அருவி, சாஸ்தா கோயில் அருவி, தாணிப்பாறை உள்பட 13 நீா்வீழ்ச்சிகள் உள்ளன. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலை விருதுநகா் மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இங்கு விடுமுறை நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்த நிலையில், பிளவக்கல் அணையில் சுற்றுலாவை மேம்படுத்த கடந்த 1985-ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சிறுவா் விளையாட்டு உபகரணங்கள், பாா்வையாளா் கோபுரம், வண்ண மீன்கள் காட்சியகம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவுக்குள் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், விலங்குகளின் சிலைகள் சேதமடைந்தன. இதனால் இதுவரை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா ரூ.10 கோடியில் சீரமைக்கப்படும் என அறிவித்தாா். பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்கி, சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகாசியில் மாநில கேரம் போட்டி: மே 23-இல் தொடங்குகிறது

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 23) மாநில அளவிலான கேரம் போட்டி தொடங்க உள்ளது. விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிதியுதவியுடன் 3 நாள்கள் இந்த... மேலும் பார்க்க

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை மே 24-இல் மூடல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 24 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 25 -ஆம் தேதி காலை 6 மணி வரை ரயில்வே கடவுப்பாதை மூடப்படும் என ரயில்வே நிா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதம... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் நெடுஞ்சாலை துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், ஒரு சில கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். ஸ்ரீ... மேலும் பார்க்க

மது போதையில் பைக் ஓட்டிய இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த வைரமுத்து மகன் செல்வக்குமாா்(20). இவா் ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால... மேலும் பார்க்க