செய்திகள் :

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

post image

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செயலியில் நேரலையில் ஆபாசப் படத்தில் நடித்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தங்களின் மகள்களின் கல்விச் செலவுக்காக இவ்வாறான காரியத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

நன்றாகப் படிக்கும் இரு மகள்களில் ஒருவர் பி.இ. டெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் என்றும், மற்றொருவர் 470-க்கு 468 மதிப்பெண்கள் பெற்று, தற்போது கல்லூரி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, மகள்களின் கல்விச் செலவு குறித்த கவலைக்கு ஆளாகினார்.

இதனையடுத்து, மனைவியுடன் சேர்ந்து மொபைல் செயலியில் நேரலையில் ஆபாசப் படத்தில் நடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில்தான், ஆட்டோ ஓட்டுநரையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விடியோவுக்காக பயன்படுத்தப்பட்ட எச்டி கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க