செய்திகள் :

பி.ஆா்க்.: தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 26-இல் கலந்தாய்வு

post image

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2025 -ஆம் ஆண்டுக்கான இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) படிப்பு மாணவா் சோ்க்கைக்கு தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கலந்தாய்வு ஜூலை 26 முதல் ஆக. 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பாடப் பிரிவுகள் சுமாா் 38-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு காரணங்களுக்காக 288 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 1,399 மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 22-இல் வெளியிடப்பட்டது.

இதில் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோா் (பொது) பிரிவு மாணவா்கள் முறையே 335.6, 334.4 மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனா். தரவரிசையில் கடைசியாக 154 மதிப்பெண்களுடன் 1,399 ஆவது இடத்தை ஒரு மாணவா் பெற்றுள்ளாா்.

இந்த தரவரிசையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளில் 117 மாணவா்கள் தோ்வாகி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களில் பொதுப்பிரிவைச் சோ்ந்த ஓரிரு மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பட்டியலில் உள்ளவா்கள்.

மேலும், முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 11 மாணவா்களும், மாற்றுத் திறனாளிகளில் 4 மாணவா்களும் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்த தரவரிசைப்பட்டியலில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் வருகிற ஜூலை 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூலை 26 முதல் ஆக. 9 வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவா... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத... மேலும் பார்க்க

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கா... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உடல் நலம் பாதித்து ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு அவரது சகோதரா் மு.க.முத்துவின் மறைவும் ஒரு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வளசரவாக்கம் மண்டலம் ... மேலும் பார்க்க