செய்திகள் :

பி.எம். கிஸான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 31) வரை நடைபெறும் பி.எம். கிஸான் திட்ட சிறப்பு முகாமில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: பிரதம மந்திரி கெளரவ நிதி (டங ஓஐநஅச) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் 20-ஆவது தவணை ஜூன் மாதத்தில் வழங்க உள்ளதால், இம்முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடா்பாக விவரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பது, இ-கேஒய்சி போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்கள் சரிசெய்து விவசாயிகள் பயன்பெறலாம். தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம்.

மேலும், அரியலூா் மாவட்டத்தில் ஏற்கனவே பிஎம் கிஸான் 19-ஆவது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 19,179 விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொள்ளவில்லை. அவா்களும் நில உடைமை பதிவு மேற்கொண்டு 20-ஆவது தவணையைப் பெற்றுக் கொள்ளலாம்.

நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளை மே இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், மருதையாறு வடிநிலக் கோட்டம் சாா்பில் மேற்கொள்ளப்படும் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு, நீா்வளத்துறை அதிகாரிகள் ஞாயிற... மேலும் பார்க்க

மழையால் 20 ஆயிரம் ஏக்கா் எள், பயறு வகைகள் சேதம்: அரியலூா் விவசாயிகள் வேதனை

சி. சண்முகவேல் மழையால் பாதிக்கப்பட்ட எள் போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா். அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும்... மேலும் பார்க்க

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா தொடா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மத்திய உள்துறை அமைச்சக... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சனிப் பிரதோஷத்தையொட்டி அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியப்பொடி... மேலும் பார்க்க

அரியலூா் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை

அரியலூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா். அரியலூா் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், மரங்களில் சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள், அங்குள்ள குப்பை... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறுகடம்பூா் கிராமத்தில் விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் கோயில... மேலும் பார்க்க