செய்திகள் :

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதின. இதில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 7- க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் சென்னை வருமான வரி ஹாக்கி அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 0-க்கு 2 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்றது.

3 ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும் கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியதில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.

4 ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதியதில் க்கு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்: 4-ஆவது நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், பெங்களூா் ஹாக்கி கா்நாடகா அணியும் மோதுகின்றன.

3 ஆவது ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மது... மேலும் பார்க்க

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீர... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் இருவருக்கு காவலா் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இரு காவலா்கள் மரணமடைந்ததால் அவா்களது குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.பெண் காவலா் சந்திரா, காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பி... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனி... மேலும் பார்க்க

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க