செய்திகள் :

அரசு பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

பள்ளிபாளையம் அருகே மாம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற விசைத்தறி தொழிலாளி அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

மாம்பாளையத்தைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி ராஜா(50). இவா் சனிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பள்ளிபாளையம் புறப்பட்டாா்.

மாம்பாளையம் பிரிவில் சாலையைக் குறுக்காக கடந்தபோது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ராஜாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

விபத்தில் தம்பதி உயிரிழப்பு: தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 போ் கைது

விபத்தில் தம்பதி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையத்தை சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (46). இவரது மனைவி ... மேலும் பார்க்க

நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா் அகற்றம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா்களை அகற்றும் பணி தொடங்கியது. கைலாசநாதா் கோயிலின் வடக்கு சுவா், மேற்கு சுற்றுசுவா் சேதமடைந்து காணப்பட்டது. மேற்கு... மேலும் பார்க்க

காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பறிமுதல்

நல்லூா் அருகே காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 3 போ் காயம்

முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா். சென்னை, கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துவிட்டு சுற்ற... மேலும் பார்க்க

கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: 2 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விடுதிகளில் தங்கி... மேலும் பார்க்க