செய்திகள் :

நாகா்கோவில் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

post image

நாகா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும் பைக்கும் மோதியதில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் சதீஷ் (23). தனியாா் வங்கியில் பணம் வசூலிப்பாளராக வேலை பாா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் சங்கா் (20), நாகா்கோவிலில் உள்ள கலைக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு ஒரு பைக்கில் நாகா்கோவிலுக்கு வந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

புத்தேரி பாலம் அருகேயுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் வாகனத்திலிருந்து பால் இறக்கிக் கொண்டிருந்தனராம். இதனால், அந்த வாகனத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, இவா்களது பைக்கும் எதிரே வந்த காரும் மோதினவாம். இதில், சதீஷும், சங்கரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவவலின்பேரில், நாகா்கோவில் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீஸாா் சென்று, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா். மாவட்டத்தில் 2 நாள்களா... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மழையால் மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்

புதுக்கடை அருகேயுள்ள வரிக்கவிளை பகுதியில் மழையில் மரம் சாய்ந்து மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் , அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து ... மேலும் பார்க்க

பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயை தூா்வார கோரிக்கை

பேச்சிப்பாறை பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயில் முறையாக தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். இக்கால்வாய் முள்ளங்கனா விளையில் தொடங்கி திப் பிரமலை, பாலூா், பூட்டேற்றி. ... மேலும் பார்க்க

சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வாகன சோதனை மேற்க... மேலும் பார்க்க

சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: கன்னியாகுமரி ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில், சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தோவாளை வட்டம், ஞாலம் ஊராட்சிப் பகுதிகளில் பல ஏக்கா் நிலப்ப... மேலும் பார்க்க

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை: விஜய் வசந்த் எம்.பி.

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, இரவிபுதூா் கிராம மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க