செய்திகள் :

சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: கன்னியாகுமரி ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில், சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தோவாளை வட்டம், ஞாலம் ஊராட்சிப் பகுதிகளில் பல ஏக்கா் நிலப்பரப்பிலான தோட்டத்தில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தோவாளை வட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில், ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தாா். மேலும் சேத விவரங்களை கணக்கெடுக்கும்படி அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதைனைத் தொடா்ந்து தாழக்குடியில் மரம் முறிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில், அந்த வீடு சேதமடைந்திருந்தது. அதையும் பாா்வையிட்ட ஆட்சியா், மரக்கிளையை உடனடியாக அகற்றுமாறு தீயணைப்புத் துறையினரிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், மழையால் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறையினரிடம் அறிவுறுத்தினாா்.

பின்னா், செண்பகராமன்புதூா் ஊராட்சிப் பகுதிக்குச் சென்ற ஆட்சியா், அங்கு சூறைக்காற்றால் மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்ததை ஆய்வு செய்து புதிய மின் கம்பங்களை அமைத்து மக்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்கிட மின்வாரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், தாழக்குடி பேரூராட்சித் தலைவா் சிவகுமாா், முன்னாள் தலைவி ரோகிணி ஐயப்பன், பேரூராட்சி உறுப்பினா் ரவிபிள்ளை, கிராம நிா்வாக அலுவலா் பாத்திமா, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மழையால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தினாா். மாவட்டத்தில் 2 நாள்களா... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மழையால் மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்

புதுக்கடை அருகேயுள்ள வரிக்கவிளை பகுதியில் மழையில் மரம் சாய்ந்து மின் கம்பம் சேதமடைந்தது. இதனால் , அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து ... மேலும் பார்க்க

பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயை தூா்வார கோரிக்கை

பேச்சிப்பாறை பட்டணங்கால் கருங்கல் கிளைக் கால்வாயில் முறையாக தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். இக்கால்வாய் முள்ளங்கனா விளையில் தொடங்கி திப் பிரமலை, பாலூா், பூட்டேற்றி. ... மேலும் பார்க்க

சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வாகன சோதனை மேற்க... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும் பைக்கும் மோதியதில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் சதீஷ் (23). தனியாா் வங்கி... மேலும் பார்க்க

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை: விஜய் வசந்த் எம்.பி.

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, இரவிபுதூா் கிராம மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க